ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

0
95

சர்வதேச பொருளாதாரம் குறித்த முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுமிடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சிமுறையில் பதவி வகித்து வருகின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இந்தியா இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பை வகிக்கவிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியா ஆரம்பித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைப்பின் தலைவர் பதவியை வகிப்பதற்கு தேவைப்படும் ஏற்பாடுகளை செய்வதற்காக ஜி-20 செயலகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், ஜி20 தலைமைப் பொறுப்பு குறித்த தொழில்நுட்பம் ஊடகம் பாதுகாப்பு மற்ற வசதிகள் குறித்த பணிகளை கையாள்வதற்காக இந்த செயலகம் அமைக்கப்படவிருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம், மற்ற அமைச்சகங்கள், துறைகள், உள்ளிட்டவற்றை சார்ந்த அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், இந்த செயலகத்தில் பணிபுரிவார்கள். 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரையில் இந்த செயலகம் இயங்குவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்படுகிறது.