நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

0
126

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாநகராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது உதயநிதி ஸ்டாலின் காணாமல் போய்விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

நான் பல்வேறு மாவட்டங்களில் பயணித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறேன். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னை தேடி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவர் ஏன் என்னை தேடுகிறார் என்ற அவர் அதற்கான காரணத்தையும் கூறினார்.

கடந்த ஆண்டு பொது தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம். நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ஒரு ரகசியம் உள்ளதாக நான் அப்போது தெரிவித்திருந்தேன். அதன் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் என்னை தேடுகிறார்.

அந்த ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன் என கூறிய உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வு குறித்த ரகசியத்தை சொன்னார். அது என்னவென்றால், அதிமுகவை போல நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம் என கூறி இதுதான் அந்த ரகசியம் என தெரிவித்தார்.

author avatar
Parthipan K