திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

0
111

திண்டுக்கல்: இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் இரண்டு ஆண்களையும் அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது.

 

சிறுமியின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

வழக்கு விவரங்களின்படி, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவளும் சதீஷ் (20) என்ற மாணவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் சதிஷ்க்கு அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். கொரோனா ஊரடங்கின் பொழுது, ​​அந்த பெண் அருண் என்ற இளைஞருடன் சமூக ஊடகங்கள் மூலம் பேச ஆரம்பித்துள்ளார். அந்த பெண் அந்த அருண் என்ற இளைஞரை விரும்ப ஆரம்பித்துள்ளார்., அந்த இளைஞனுக்கும் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

 

இதற்கிடையில், அருண் மற்றும் சதீஷ் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, அந்த பெண் இரண்டு பேருடன் பொழுது போக்குவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த பிரச்சினை மூவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. பின்னர், இரண்டு இளைஞர்களும் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக சொல்லப்படுகிறது.

 

தனது அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அறிந்த கல்லூரி மாணவி, நிலக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அருண், சதீஷ் இரண்டு பேரையும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நெல்சன் என்ற மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார் .

author avatar
Kowsalya