இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்!

0
229
Two-wheelers head-on collision accident! Sensational incident!
Two-wheelers head-on collision accident! Sensational incident!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(25)இவர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு அவருடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில்அதி வேகத்தில் எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.எதிரே வந்த மோட்டர்சைக்கிளை இயக்கி வந்தவர் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த செல்வா என்பவர்.மேலும் இந்த விபத்தில் பிரத்திவிராஜ் மற்றும் செல்வா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு முருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு அவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K