இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி!

0
96
Two-wheeler collide head-on accident! Body burnt woman victim!
Two-wheeler collide head-on accident! Body burnt woman victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்ராயன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம்.இவருடைய மகள்கள் கவி ரஞ்சனி,ஹேமலதா இவர்கள் இருவரும் கடந்த 6 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சீரகாப்பாடியில் உள்ள அவர்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றனர்.அதனையடுத்து பாட்டி வீட்டிலிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கரிமேடு திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அதே பகுதியில் வீரபாண்டி இருக்கே உள்ள பாலம் பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.அந்த விபத்தில் கவிரஞ்சனி ஓட்டி வந்த மொபட் தீப்பற்றி எரிந்தது.அதில் அவருடைய உடல் முழுவதும் தீ பரவியது.இதில் உடல் கருகி படுகாயம் அடைந்தார்.அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கவிரஞ்சனி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் விபத்தில் கீழே விழுந்த லேசான காயமடைந்த ஹேமலதா மற்றும் சண்முகம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K