காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

0
39

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

காரைக்கால் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கணேஷ் அவருடயை நண்பர்கள் சரவணன், வாசிப் முஷரப், அருண் ஆகிய மூன்று பேருடன் காரில் நேற்று(ஆகஸ்ட்12) மயிலாடுதுறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் இன்று(ஆகஸ்ட்13) அதிகாலை மீண்டும் காரைக்காலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.

காரைக்காலின் கோட்டுச்சேரியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த பொழுது கணேஷ் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தூக்கி எறியப்பட்டார். அதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வாய்க்காலில் தலைகுப்புற விழுந்தது. கார் தலைகுப்புற விழுந்ததில் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாசிப் முஷரப், கணபதி இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த அருண் மற்றும் காரை ஓட்டி வந்த சரவணன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சரவணன் மற்றும் அருண் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனையில் சரவணன் மற்றும் அருண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவலை துறையினர் விபத்தில் உயிரிழந்த கோட்டுச்சேரியை சேர்ந்த செல்வம், காரைக்காலை சேர்ந்த கணபதி, வாசிப் முஷரப் ஆகயோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.