சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

0
82

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.

நடிகர் சூர்யா, ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா தற்போது இரண்டாவது முறையாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல் உள்ளிட்ட அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இதனால் எதற்கும் துணிந்தவன் படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், திரையரங்கங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியிட்டு வரவேற்பை பெற்ற நிலையில், நேற்றைய தினம் படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டது. இந்த தீம் மியூசிக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இன்றைய தினம் படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K