கோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

0
61

அருள்ஞானஜோதி என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.இவருக்கு ஜெர்லின் நேகா என்ற 9 வயது மகள் உள்ளார்.

அந்த சிறுமி ஒரு கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடி கொண்டிருந்த போது திடீரென துணி கழுத்தை நெருக்கிய நிலையில் அந்த சிறுமி மயங்கிவிட்டார்.இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவரை பரிசோதித்து விட்டு சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கோவையில் மற்றொரு துயரமும் அரங்கேறியுள்ளது.
கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடை பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன்.இவருக்கு 9 வயதில் பவதாரணி என்ற மகள் உள்ளார்.சிறுமி இரண்டு அடுக்கு கட்டில் ஒன்றில் வீட்டு பாடம் எழுதி கொண்டிருந்தார்.அப்பொழுது பென்சில் கீழே தவறி விழுந்ததில் அதை எடுக்க முயன்று கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்.மேலும் தலையில் பலத்த அடிபட்ட அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இந்நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K