டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

0
59

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

சம்பவம் 1 : 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி நெடுஞ்சாலையில் மத்திய சேமக் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பாதுகாப்பு இராணுவ வீரர்களுடன், தற்கொலை தீவிரவாதியும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்சு இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக இராணுவ வீரர்கள் சென்ற போது ஸ்கார்பியோ வகை வண்டி ஒன்று படையினரின் வாகனத்தின் மீது மோதி வெடித்தது. அந்த சிறிய வாகனத்தில் 350 கிலோ வெடிமருந்து இருந்ததாக கூறப்பட்டது.

சம்பவம் 2 : நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி என்பவருடன் இருந்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இன்று புதிய வீடியோவில் சீமானை விமர்சிக்கும் விதமாகவும், அவர் பேட்டியில் சிரித்துக் கொண்டு சமாளிப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவங்களின் விளைவாக டுவிட்டரில் பொம்பள பொறுக்கி சீமான் என்று டிரெண்டிங் ஆகியது.

வளர்ந்து வரும் கட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல் வீடியோ சோதனை பரவியுள்ளது. இப்படி ஒரு சோதனையா என்று சீமானின் தம்பிகள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். செய்தியாளர்கள் வீடியோ பற்றி கேட்டபோது: என்னை எதிர்ப்பவர்கள் எதிரி கிடையாது, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி என்று சிரித்தபடி சினிமா டயலாக் பேசினார்.

சம்பவம் 3 : பிப்ரவரி 14 இன்று காதலர்கள் தனது காதலன், காதலிகளுக்கு அன்பு நிறைந்த பரிசுகளை வாரி வழங்கிய நாளாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் காதலர்களின் கவிதைகளும் வாழ்த்துகளும் மழையாக பொழிந்த வண்ணமாக உள்ளது. பலர் காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு காணொளிகளை வெளியிட்டு மகிழ்ந்தனர்.

author avatar
Jayachandiran