லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

0
75

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

லாட்டரி சீட்டில் தனக்கு ரூ.220 கோடி விழுந்துவிட்டதாக தவறாக எண்ணி அவசரத்தில் வேலையை விட்ட பெண் செய்தியாளர் ஒருவர் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் செய்தியாளர் நடாலியா என்பவர் கிறிஸ்மஸ் சிறப்பு குலுக்கல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதல் பரிசான ரூபாய் 220 கோடியை பெற்ற எண் அறிவிக்கப்பட்டது. அந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு தன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு உடனே நான் துள்ளி குதித்தார் நடாலியா.

நேரலை ஒளிபரப்பு என்பதையும் அவர் கவனிக்காமல் தான் இனிமேல் 220 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரி என்றும் இனிமேல் வேலைக்கு செல்ல மாட்டேன் என்றும் வேலையை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவர் வாங்கிய சீட்டுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே பரிசு விழுந்ததாக தெரியவந்தது. இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளான அவர் தான் உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலால் வருந்துவதாக தெரிவித்தார். மேலும் தான் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்றும் மீண்டும் வேலைக்கு செல்லவுள்ளதாக கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

author avatar
CineDesk