குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

0
77

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.

சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனாலும், குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. அதில் கணக்கில் அடங்காதோர் பலியாகினர்.

தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கண்டித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை  அழித்து விடப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் பயப்பட போவதில்லை துருக்கி அரசு கூறியிருந்தது.

இந் நிலையில் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்,  துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடிதம் எழுதினார். கடந்த 9ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: முட்டாள்தனமாகவும் செயல்பட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு பொறுப்பாக வேண்டாம். துருக்கி நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு நானும் காரணமாக இருக்க விரும்ப வில்லை.

எனவே, நேர்மையாக, மனித நேயத்துடன் செயல்பட்டால் வரலாறு உங்களை உயர்த்தும். தீமையை செய்தால், கொடுங்கோலனாக பார்க்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வண்ணம், டிரம்ப்பின் கடிதம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K