கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

0
82

மே-29 இன்றுடன் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரந்துள்ளது. இதனால் உலகில் முதல் முறையாக லட்சம் பேரை பறிகொடுத்து கொரானா பலி எண்ணிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளது அமெரிக்கா. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 775 பேர் கொரானா தொற்றால் பலியாகிருக்கின்றனர்.

இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன, எவ்வாறு புதைக்கப்பட்டன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

இதனால் வெளிநாட்டவரை தன் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒரு துருப்புச்சீட்டாக கொரானாத் தொற்றை பயன்படுத்துகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என பிற நாட்டவரால் விமர்சிக்கப்படுகிறது

மேலும் இந்த இக்கட்டான காலத்தில் H1B விசா காலத்தை நீட்டிக்காமல், அமெரிக்காவில் பணிபுரியும் பிறநாட்டவரை உடனடியாக வெளியேற அறிவிப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

H1B விசா ரத்து செய்யப்பட்டால் இரண்டு லட்சம் வெளிநாட்டவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவர். அவற்றுள் ஒரு பாதி அங்கிருக்கும் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆட்சியைக் கைப்பிடித்திலிருந்து மக்களின் அதிருப்தியை மட்டும் சம்பாதித்த ஒரே அமெரிக்க பிரதமர் டிரம்ப் என அந்நாட்டு மக்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அங்கு பணிபுரியும் பிறநாட்டவர்களை வேலையிலிருந்து நீக்குவதன் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தன் நாட்டவர் மட்டுமே தன்னாட்டில் இருக்க வேண்டுமென்றும் வெளிநாட்டவர்கள் மீது எதிர்ப்புணர்வை கிளப்பி விட்டு அரசியல் கொண்டிருந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பிடிக்க கொரானா என்கிற கேடயத்தை உபயோகித்து சீனா வைரஸ்களை பரப்பும் நாடு குற்றம் சாட்டியும், தன் நாட்டு மக்களுக்காக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்திற்காக இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்தும் என அமெரிக்க மக்களுக்காக எதையும் செய்ய தயாரென்று மக்களிடம் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அரசியல் செய்துகொண்டிருக்கிறார் டிரம்ப்.

author avatar
Parthipan K