பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

0
89

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனராவங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.மேலும் நமது போனிற்கு வரும் போலி எஸ்எம்எஸின் லிங்க்கை கிளிக் செய்யும் பொழுது ஆண்ட்ராய்டு போன்கள் முழுமையாக ஹேக் செய்யப்பட்டு,வங்கி கணக்குகளில் பணம் திருடப்பட்டு வருவதாக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த வைரஸ் நமது போனிற்கு பரவாமல் இருக்க,தேவையற்ற எஸ்எம்எஸ் லிங்கை கிளிக் செய்வதையும்,தெரியாத செயலிகளை தரவிறக்கம் செய்வதையும் நாம் தடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொலைபேசியினை கொடுக்கும் பொழுது எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra