பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்!

0
130
Train service to start after 12 years in February! People in excitement!
Train service to start after 12 years in February! People in excitement!

பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர்.அதன் காரணமாகவும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டது.

மேலும் கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டது.அதனால் வெளியூர்களில் வசித்து  வரும் மக்கள் சீரமமின்றி அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

இந்நிலையில் மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி வரையில் 90 கிலோ மீட்டர் தூர மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணி  கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போத தொடங்கப்பட்டது.மேலும் முறையான நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டத்தின் பணியானது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.போடி மக்களின் நீண்ட போராட்டத்தின் பிறகு கடந்த 2017 ல் மத்திய அரசு மீண்டும் ரூ 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் பணியை தொடங்கி வைத்தது.

அதனை தொடர்ந்து அகல ரயில் பாதையாக மாற்றும் பணியானது முதல் கட்டம் ,இரண்டாம் கட்டம் என கட்டி முடிக்கப்பட்டது.அதன் பிறகு அந்த பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி மதுரை,தேனி இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.போடி-தேனி இடையிலான 15 கிலோமீட்டர் அகல ரயில் பாதை முற்றிலும் முடிவடைந்தது.கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிவிரைவு  ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வண்டி எண் 06701 மற்றும் 06702 ஆகிய இரண்டு ரயில்களும் சென்னையிலிருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அதிவிரைவு ரயில்கள் போடி வரை இயக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 19 தேதி முதல் தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றது.

author avatar
Parthipan K