கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

0
132
Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!
Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது.அந்நேரமாக பார்த்து அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.இதில் பின்னல் அமர்ந்திருந்த மனைவி அரசு பேருந்தின் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார்.இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து  உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அவருடைய கணவர் பலத்த படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மயங்கி நடு ரோட்டில் கிடந்துள்ளார்.உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவுள்ளது.இந்த காட்சி அருகில் வைத்திருக்கும் சிசிடிவி கேமாராவில் பதிவானது.

author avatar
Parthipan K