ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

0
75

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர்

பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான நிலையில் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் சந்தையில் தக்காளியின் விலை இன்றைய இன்று ரூபாய் 180 முதல் 300 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். இந்தியாவை வணிக ரீதியாக பகைத்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது என அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்ஹான் எதிர்கட்சியினர் நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான்கான் உடனே பதவி விலக வேண்டும் என்றும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி சமீபத்தில் பிரமாண்டமான பேரணி நடந்த நிலையில் அடுத்தகட்டமாக ‘பிளான் பி’ என்ற பெயரில் நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

author avatar
CineDesk