தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

0
59

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 98 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,891 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,80,063 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் 19 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,788 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 52,380 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 75,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 49,64,141 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K