தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா; மேலும் 92 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

0
55

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 92 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,110 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,86,173 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,814 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,23,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 52,070 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 82,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 50,47,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K