இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

0
45

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 943 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 64,982 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 27,12,520 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 7,62,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 16,286 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 7,64,281 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 1,85,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 11,541 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 5,54,711 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 328 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 24,103 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Parthipan K