இன்றைய ராசி பலன் 19-09-2020 Today Rasi Palan 19-09-2020

0
61

இன்றைய ராசி பலன்- 19-09-2020

நாள் : 19-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 03, சனிக்கிழமை

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 9.00 முதல் 10.30 வரை.

எம கண்டம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

குளிகன்:

காலை 6.00 முதல் 7.30 வரை,

திதி:

துதியை திதி காலை 09.10 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.39 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு சுவாதி.

மரணயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக உள்ளது.சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். யோகத்தில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சீர்குலையாமல் இருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாக கூடும். எதிலும் நாட்டமில்லாத மந்த நிலை காணப்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நினைத்தப்படி லாபம் காண முடியும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உற்சாகம் அளிக்க கூடிய வகையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். எதிர்பாராத நபர்களின் வருகையால் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறக் கூடும். இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக அமைய கூடும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போன்ற விஷயங்களில் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்து நிற்கும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பகைவர்கள் கூட நண்பர்களாய் மாறும் சந்தர்ப்பங்கள் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.42 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

 

 

author avatar
Kowsalya