தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை!!

0
58

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தனர். இதற்கிடையே ரேஷன் கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், ரேஷன் கடைகள் மூலம் அரசு 1000 ரூபாய் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன. இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் தங்கள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா பரவல் காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினார். இந்த பணிகளை ரேஷம் கடை ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப். 4 ஆகிய தேதிகளில் செய்தனர்.

எனவே, விடுமுறை நாட்களில் வேலை செய்த அந்த மூன்று நாட்களுக்கு மாற்றாக செப். 19, அக். 17, மற்றும் நவம்பர் 21 ஆகிய தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K