நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

0
158

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட தங்கம் கடந்த இரண்டே நாட்களில் 448 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி ஒரு கிராம் 4685 ரூபாய்க்கு விற்றது.ஒரு சவரன் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதன்படி நேற்று அக்டோபர் 22 ஒரு சவரன் தங்கம் 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று அக்டோபர் 23 ஒரு கிராமிற்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து 4,741 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் தங்கம் 37,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு நாட்களில் உச்சத்தை தொட்டு உள்ளது.அதாவது அக்டோபர் 20-ம் தேதி 60.80 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 2.40 ரூபாய் உயர்ந்து 63.20 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Pavithra