இன்று சேலத்தில் நிலநடுக்கம் : அச்சத்தில் பொதுமக்கள் !

0
53

இன்று சேலத்தில் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள் !

ஒருபுறம் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையை தடுக்க தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மற்றொருபுறம் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை விடாமல் பெய்து வருகின்றது.

இவ்விரண்டும் மாறி மாறி இயற்கை சீற்றத்தினால் அழிந்துவரும் நிலையில், இப்பொழுது சேலத்தில் புதிதாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.ரிக்டர் அளவுகோலில் குறைவாக இருந்ததனால் எவ்வித உயிர் மற்றும் பொருள் சேதமும் ஏற்படவில்லை.

author avatar
Parthipan K