இன்றும் வரும் 5 ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தனர். டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளனர்.
இந்த 250 வார்டுகளில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும் 50 சதவீதம் வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் மொத்தம் 1,46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மெட்ரோ ரயில்களின் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.அந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாளாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதால் மாநில கல்வி இயக்குனரகம் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இன்றும் வரும் 5 ஆம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது.