பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு  உயர்நீதிமன்றத்தால் ரத்து

0
192
#image_title

பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு  உயர்நீதிமன்றத்தால் ரத்து

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற
மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை தகவல்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழின் நகலை வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி வீரேன் வைஷ்ணவ் விசாரித்தார்.

இந்த விசாரணையின் போது குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜனநாயகத்தில் பிரதமர் பதவியில் இருப்போர் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அல்லது எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த விவகாரத்தில் எவ்வித பொது நலனும் அடங்கியிருக்கவில்லை. இதில் பிரதமரின் அந்தரங்கம் பாதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பெர்ஸி கவினா, வேட்பாளர் படிவத்தில் கல்வித் தகுதியை பூர்த்தி செய்துள்ளார். பட்டப் படிப்பு சான்றிதழ் நகலை கேட்கப்பட்டுள்ளது தவிர மதிப்பெண் பட்டியலை கேட்கவில்லை என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்த மனு மீதான குஜராத் நீதிமன்றம் என்று கூறிய தீர்ப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையதம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை தகவல்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை குஜராத் மாநில சட்டப்பணிகள் சேவை ஆணையத்திடம் நான்கு வாரங்களுக்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Savitha