143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

0
68

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K