இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

0
74

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது.

கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆன்லைன் கற்பிக்கும் 3 லட்சம் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது.

ஐந்து நாட்களுக்கு நடைபெறும் பயிற்சியில் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் வீடியோக்களை எவ்வாறு பயன்படுத்துவது, ஆவணங்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் காரணமாக 50 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் கற்க வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author avatar
Jayachithra