புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

0
139

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது.

இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி இந்தத் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்‌படி அரசு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.
*அனைத்து புறம்போக்கு நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்பை விபரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.

*சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு விபரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இப்பகுதிகளில் தடையாணை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை தளர்வு செய்வது குறித்து அரசு முடிவு செய்யும்.

  • நீர்நிலைகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்க வேண்டும். ஆண்டு வருமானம் மூன்று லட்சம் வரையில் உள்ள பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகுதியான நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வரன்முறை செய்ய வேண்டும்.

*கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைக் குடும்பத்தின் நலன் கருதி தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க நில மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும், மேய்க்கால் மந்தைவெளி போன்ற ஆட்சேபனுக்குரிய ஆக்கிரமிப்புக்கள் ஆக இருந்தால் கால்நடைத்துறை அனுமதி அவசியம்.

  • ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு நிலமதிப்பு வழிகாட்டி மதிப்பின்படி உரிய தொகை வசூல் செய்து பட்டா வழங்க வேண்டும்.

*நகர்ப்புற பகுதிகளில் இரண்டு சென்ட்க்கு மிகாமலும் கிராமப்புறங்களில் மூன்று சென்ட்க்கு மிகாமலும் பட்டா வழங்கலாம்.

*இச்சிறப்பு திட்டங்களை ஓராண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். கணினியில் பதியப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வு அறிக்கையை நில நிர்வாக ஆணையர் வரும் ஐந்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K