நிபந்தனைகளுடன் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதியளித்த தமிழக அரசு

0
59

கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ மற்றும் டாக்சிகளை இயக்க தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது 4வது ஊரடங்கு அமலில்லிருக்கும் நிலையில் மத்திய அரசு ஒப்புதலுடன் மாநில அரசுகள் தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கும் சென்னை மற்றும் பிற கொரோனா கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது பயணிகள் ரயிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் துவங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில் மற்றும் விமான நிலையங்களில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி படுவதால் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளித்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கட்டுப்படுத்த பட்ட பகுதிகளிலிருந்தும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

author avatar
Parthipan K