திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

0
67

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் மாதாமாதம் நிலைத்திருப்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அவருடைய இந்த கடிதத்தை கண்ட இணையதள வாசிகள் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அடிமை அரசு என்று விமர்சனம் செய்த திமுக தற்போது அதிமுக செய்த அதையேதான் செய்கிறது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதோடு அதிமுக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அது அடிமை அரசு திமுக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அது ஆளுமை அரசா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் முக்கிய திட்டங்கள் யாவும் பிரச்சனை இல்லாமல் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது மத்திய அரசிடம் விரோதப் போக்குடன் இருந்து வரும் திமுகவால் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு என்ன நன்மையைப் பெற்றுத் தரமுடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.