திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு

0
113

சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களும் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஆனால் இன்னும் பொதுத்தேர்தல் நடைபெற ஒரு ஆண்டுக்கு மேல் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்று தேர்தல் விதி கூறுவதால் அதிவிரைவில் திருவொற்றியூர் குடியாத்தம் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே திமுக இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி இருந்த நிலையில் அந்த இரண்டு தொகுதிகளை மீண்டும் திமுக கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

author avatar
CineDesk