திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

0
127
Clash between friends drunk in Tiruthani! One of them died!
Clash between friends drunk in Tiruthani! One of them died!

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த பொருட்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் திருத்தணி போலீசார் குமரேசனை தாக்கிய ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலையில் படுகாயம் அடைந்த குமரேசன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தீவீர சிகிச்சை அளிக்கப்பட குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தகவல் அறிந்த திருத்தணி காவல் ஆய்வாளர், ஏழுமலையை அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.