கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம்
சர்வதேச அளவில் இந்திய பெண்கள் என்றாலே ஒருவித மரியாதை கிடைக்கும்.அதற்கு காரணம் கலாச்சாரத்திலும் சரி,அழகிலும் சரி இந்திய பெண்களே சிறந்தவர்கள் என பலரும் ஏற்று கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் குறிப்பாக கேரள பெண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள்.பெண்களே பொறமை கொள்ளும் அளவில் அழகில் மிஞ்சியவர்களாக கேரள பெண்கள் திகழ்கிறார்கள்.அழகு மட்டுமல்லாமல் குணத்திலும் கேரள பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள பெண்களின் அழகின் ரகசியம்
கேரள பெண்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் அழகாக இருப்பதற்கு காரணமாக அவர்கள் வசிக்கும் இடமே காரணமாக கூறப்படுகிறது.அடுத்ததாக அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வதுடன்,அதிகமாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதுமட்டுமில்லாமல் மேலும் சில காரணங்களும் கூறப்படுகிறது.அது அவர்களின் அழகு பராமரிப்பு முறைகள் தான்.
கேரளப் பெண்களின் சரும பராமரிப்பு முறைகள்
கேரளாவில் தேங்காய் எண்ணெயை தான் அதிமாக பயன்படுத்துவார்கள்.அழகிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதபடுகிறது. பெண்கள் குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி முகத்தில் உலரவிடுவார்கள். அவ்வாறு செய்யும் போது முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.
மேலும் அவர்கள் முல்தானி மட்டி மற்றும் சந்தனத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள் . இதனால் முகத்தில் தேம்பல், கரும் புள்ளிகள் மற்றும் தழும்புகள் முதலியவற்றை நீங்கும். முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மையாக மாறும். உணவில் தயிர் மற்றும் மீன் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.
குறிப்பாக பாசிப்பயிரை பொடி செய்து சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துவார்கள். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பேஸ் பேக்கில் பயன்படுத்துவார்கள்.மேலும் அவர்கள் கஸ்தூரி மஞ்சள்,கற்றாழை,கடலைமாவு மற்றும் சந்தனம் உள்ளிட்டவைகளை மட்டுமே தங்களின் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்துவார்கள்.எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்கப்படும் சோப்பு மற்றும் கிரீம்களை பயன்படுத்தமாட்டார்கள்.
இதெல்லாம் தொடர்ந்து செய்து வருவதால் தான் மற்ற பெண்களை விட கேரள பெண்கள் அழகில் மிஞ்சியவர்களாக காணப்படுகிறார்கள்.நீங்களும் இந்த டிப்ஸை பயன்படுத்த தயாராகி விட்டீர்களா?