தைராய்டு பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் இதனை எடுத்துக் கொண்டால் போதும்!

0
84

தைராய்டு பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் இதனை எடுத்துக் கொண்டால் போதும்!

அதிகளவு பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது தைராய்டு பிரச்சனை தான். தைராய்டு என்பது கழுத்தில் வீக்கம், உடல் பருமன் ஆகுதல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுதல் தான்.

அதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் உப்பு சரி இல்லாதது என கூறுகின்றனர். அதனால் பல்வேறு வகையான உப்பு வகைகள் உருவாகின்றது. நாம் எப்பொழுதும் கல்லுப்பை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.மேலும் இந்த தைராய்டு பிரச்சினையை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்கு முதலில் ஆடாதொடா இலை, இரண்டு வர மிளகாய், சித்தரத்தை, சுக்கு, மிளகு, நெய், தேங்காய், பனைவெல்லம், ஆட்டுப்பால் இந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:அரை மூடி தேங்காவை நன்கு துருவி அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு வானிலையில் ஊற்றி சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு அதனுடன் 100 மிலி ஆட்டுப்பால் சேர்க்க வேண்டும்.

பிறகு ஆடாதொடா இலையில் பாதி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலையின் நாரை நீக்கிவிட்டு சிறிய உரலில் போட்டு நன்கு இடித்து அதனை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேர்க்க வேண்டும்.

அதனுடன் 100 கிராம் பனை வெல்லம் சேர்க்க வேண்டும். மேலும் 5 கிராம் சித்தரத்தம், மிளகாய் வற்றல், 3 கிராம் சுக்கு , 20 மிளகு, இந்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக தயார் செய்து கொள்ள வேண்டும். கொதிப்பதில் இந்த பொடியையும் சேர்க்க வேண்டும்.

அதனுடன் 50 மில்லி நெய் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அந்த பொருட்கள் வானிலையில் ஒட்டாத இருக்கும் நிலையில் நாம் இறக்கி விடலாம். ஆரிய பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொண்ட தினந்தோறும் காலையில் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். கர்ப்பப்பைகள் நன்கு வளர்ச்சி அடையும். மாதவிடாய் பிரச்சனைகள் அகழும். இதனை காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு குடித்து வர வேண்டும்.

 

author avatar
Parthipan K