மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

0
74
Three lives lost by mother-in-law! Disaster in Salem!
Three lives lost by mother-in-law! Disaster in Salem!

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

தற்போது குடும்பங்களின் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் பலர் பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதாவது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலைக்கு பலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ளே இருப்பதாலும் வெளியே செல்ல முடியாத காரணத்தினாலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலையே நாடி செல்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது சேலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சேலத்தில் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜேஷ் மற்றும் குறிஞ்சி தமிழ். இருவருக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற முடிந்தது. இவர்களுக்கு விமல் கமல் என்று இரு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆன முதலிருந்தேன் குறிஞ்சி தமிழ் மாமியார் முத்தமிழுக்கும் பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது. இருவருக்கிடையே நடைபெறும் தொடர் பிரச்சனையால் ராஜேஷ் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார்.

கீழே ராஜேஷ் அம்மா வசித்து வந்துள்ளார். அப்படி தனித்தனியாக வசித்து வந்தும் இருவருக்குள்ளே பிரச்சனை ஓயவில்லை. தொடர்ந்து மாமியாரின் கொடுக்கும் கொடுமையை சகித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் குறிஞ்சி தமிழ் தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அப்பொழுது ராஜேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு பிள்ளைகளையும் மின்விசிறியில் உன்கிட்ட கொலை செய்துள்ளார். பின்பு இவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய ராஜேஷிற்கு மனைவி மகன்கள் இருவரும் தூக்கிட்டு இருப்பதை பார்த்து பெருமளவு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மூவரின் உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாமியார் ஏதேனும் வரதட்சணை கொடுமை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.