அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

0
62
Threatening corona infection! Public in panic!
Threatening corona infection! Public in panic!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்ட போது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.தற்போது கொரோன தொற்று அதிகமுள்ள நாடாக அமெரிக்கா,பிரான்ஸ்,இந்தியா,பிரேசில்,ரஷ்யா ஆகிய 5 நாடுகள் உள்ளது.அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை  ஓர் நாளில் 63,850 ஆக உள்ளது.ஓர் நாளில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக உள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் ஓர் நாளில் பார்தித்தவர்களின் எண்ணிக்கை 71,910 ஆக உள்ளது.ஓர் நாளில் கொரோனாவால் பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,157 ஆக உள்ளது.அதேபோல தமிழ்நாட்டில் ஓர் நாளில் 1,500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர்.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று பாதித்து வருவதால் வெளிநாடுகளில் இந்தியர்கள் வருவதற்கு தடை செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.டெல்லி,தமிழ்நாடு மகராஷ்டிரா,குஜராத் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கது.