போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்!! இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!

0
140
#image_title

போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்!! இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போல் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் நடைபெற்ற காவல் நிலையங்களாக கருதப்படும் விகேபுரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாக பணி செய்து வந்த ராஜ்குமார் மற்றும் போகன் ஆகிய இருவரையும் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Savitha