பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்!

0
201
This is the plan of Pakistan! This is their job!
This is the plan of Pakistan! This is their job!

பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்!

நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா பொதுச்சபை 76 வது கூட்டம் நடைபெறுகிறது. அப்போது உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் ஸ்நேகா தொகுப்பே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார். பாகிஸ்தான் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களை தூண்டி இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் என்றும், குற்றம் சாட்டினார்.

மேலும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்கமுடியாத பகுதிகளாக இருக்கும் என்றும் பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும், உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடக்கும் செயலில், பாகிஸ்தான் நீண்ட காலமாகவே இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும், அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்து தருவது தான் பாகிஸ்தானின் அரச கொள்கையாக இருக்கிறது. இதை உலக நாடுகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும், என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களது கொல்லைப் புறத்திலேயே வளர்த்து வருகிறது.

இந்தியா மட்டுமல்ல உண்மையில் அவர்களின் கொள்கையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அவர்கள் தங்கள் நாட்டில் மத வெறி வன்முறை மற்றும்  பயங்கரவாத செயல்களை மறைக்க முயற்சிக்கின்றனர் எனவும் கூறினார்.