சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? வெளியான தகவல் குதூகலத்தில் ரஜினி ரசிகர்கள்!

0
78

அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினியை யார் இயக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருடைய மத்தியிலும் பூதாகரமாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார், பால்கி இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது .

ஆனாலும் கூட ரஜினியின் அடுத்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதாவது ரஜினியின் அடுத்த திரைப்படமான ரஜினியின் 169வது திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.