விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்!
தற்போது காலம் வளர்ந்து விட்டது என்ற பெயரில் அனைவரின் வீட்டிலும், ஒரு வாகனம் அவசியமாக உள்ளது. அனாவசியமாக இரண்டு முதல் மூன்று வாகனங்கள் உள்ளது. அது அவர்களது வசதியை பொருத்தது.
தற்போது நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கச்சா எண்ணை விலை குறைவாக இருந்த பொது கூட மாநில அரசு வரி, மத்திய அரசு வரி என மக்களிடம் இருந்து சுரண்டத்தான் பார்கிறார்கள். தற்போது 106 ரூபாய் வரை விலை விற்கப்படுகிறது. அந்தவகையில் விமானங்களுக்கு பயன்படுத்தும் டர்பன்டைன் கூட விலை கம்மிதானாம்.
ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களுக்கான எரிபொருள் டர்பன்டைனை விட விலை அதிகரித்து வருவதாக பல்வேறு செய்திகளும் செய்திக் குறிப்பில் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்திலும் மத்திய அரசு மக்களை மிரட்டி வரி வசூலித்து வருவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் பொது மக்களுடன் நான் இருப்பதாகவும், கூறியுள்ளார். இதை தொடர்ந்து இதற்காக குரல் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.