தடைகளை தாண்டி வென்றது தெய்வீககாதல் ! நெகிழ்ச்சி சம்பவம்!

0
93

நாட்டில் ஒரு சிலர் காதலிப்பதாக தெரிவித்துக்கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல, ஒரு சிலர் காதலிப்பதாக தெரிவித்துக்கொண்டு பெற்றோர்களின் மனம் துன்பபடுமாறு நடந்து கொள்கிறார்கள். அதோடு தான் காதலித்த நபருடன் பெற்றோர்களை உதறிவிட்டு சென்று விட்டு அதன் பிறகு காலம் கடந்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு மறுபடியும் பெற்றோர்களை வந்து அடைகிறார்கள்.

இப்படி செய்வதால் பெற்றோர்கள் மனமுடைந்து போகிறார்கள். பெற்றதிலிருந்து அவர்கள் ஆளாகும் வரை அவர்களை பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு காதலித்தவர்களுடன் சென்று பின்பு தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து அதன்பிறகு பெற்றோர்களை நாடி வருவது ஒருசில நபர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதேபோல ஒரு சில இளைஞர்கள் நம்பி காதலித்த பெண்களை கைவிட்டுவிட்டு சென்றுவிடுவதுமுண்டு.இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டத்தில் பட்டரஹல்லி கிராமத்தைச் சார்ந்த மனு என்ற இளைஞரும் சோபனா என்ற இளம்பெண்ணும் கடந்த 6 வருட காலமாக காதலித்து இருந்திருக்கிறார்கள். கல்லூரிப்படிப்பை குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே நிறுத்திய மனு அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டே தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஷோபனாவின் இரு கால்களும் திடீரென்று செயலிழந்த காரணத்தால், அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மனமுடைந்த மனு ஷோபனாவை பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எங்குமே அவரை குணப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, தன்னை தவிர்த்து வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கின்றார். ஆனால் அவருடைய வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ளாத மனு தன்னுடைய காதலில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இந்த காதல் ஜோடிகளின் திருமணத்தை அந்த கிராமமே ஒன்று கூடி நடத்தியிருக்கிறது. ஷோபனாவால் தற்சமயம் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் தான் அவரை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.பல தடைகளை தாண்டி தன்னுடைய காதலில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடிகளின் காதல் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது. அதோடு பலரும் அவர்களுடைய இந்த திருமணத்தை சமூக வலைதளங்களில் அறிந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக, காதலியை காதலனோ காதலியோ கைகழுவிவிட்டு செல்லும் சூழ்நிலையில் காதலியால் இனி நடக்கவே முடியாது என்ற சூழ்நிலையிலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்து அதில் வெற்றியும் கண்ட ஷோபனா மனு ஜோடி இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.