வங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து

0
66

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை பற்றி அரசு சற்று சிந்திக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் வாரிய உறுப்பினர் சதீஷ் மராத்தே கூறியுள்ளார்.நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் செயல்பட வேண்டும். இதனால் பொதுத்துறை வங்கியினை தனியார்மயமாக்க கூடாது.பங்குகளை பெரும்பகுதியை  பொதுமக்கள் விற்பனை செய்யும்போது அரசாங்கம் தனது பங்குகளை 26% குறைத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாரிய உறுப்பினர் .கூட்டுறவு வங்கித் துறையுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு அரசு பொதுதுறை நடத்தி,வங்கியில் பணியாற்றத் தொடங்கியனை சதீஷ் மராத்தே, எதிர்காலத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு அவற்றின் அமைப்புகள், செயல்முறைகள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை போன்றவற்றை  முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று சதீஷ் மராத்தே கூறினார்.

அரசாங்கம் பங்குதாரர்களாக இருக்க வேண்டும்.பொதுத் துறை வங்கிகளின் உரிமையானது பொது மக்களிடம் பெரிய அளவில் இருக்க வேண்டும். 26 சதவீதத்திற்கு மேல்  வங்கிகள் சட்டரீதியான கட்டுப்பாடுகளைப் பெறும் இடத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 51 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை நீக்குவது அதிக இழப்பைத் தரும் என்றும், வங்கிகளின் உயர் நிர்வாகத்திற்கு பங்குகளை வழங்குவது உள்ளிட்ட அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகப்பெரிய பலனைத் தரும்.தனிப்பட்ட பங்குதாரர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது எந்தவொரு நிறுவனமோ அல்லது குழுவோ அதிகப்படியான கட்டுப்பாட்டை வங்கிகள் மீது செலுத்த முடியாது என்பதை மற்ற சட்டங்கள் உறுதி செய்யும் என அவர் மேலும் கூறினார்.

முறையான நிதி முறைகளில் பங்கெடுக்காமல் வெளியிலேயே 50 கோடி மக்கள் உள்ளனர்.2004 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் நிதி சேர்க்கையில் முயற்சிகள் இருந்து வந்த நிலையில் ஒரு வங்கி அல்லது நுண் நிதி நிறுவனத்தால் கூட அதைத் நேருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வங்கி தேசியமயமாக்கல் 51’வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்தரங்கின் போது   கருத்துக்களை சதீஷ் மராத்தே நேற்று தெரிவித்தார்.

author avatar
Pavithra