திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..?

0
91
Thirumavalavan MP
Thirumavalavan MP

திமுக அமைச்சர் முன் கைகட்டிய அடங்கமறு தலைவர்! கைக்கட்டிய காரணம் இது தானாம்..?

திமுக அமைச்சர் முன்னே கைகட்டி நின்றேனா? நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் வளர்ச்சியை பிடிக்காத சிலரும்,என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் இவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்பது என்னுடைய மேனரிசம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ளது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சியான திமுகவின் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த சந்திப்பின்போது திருமாவளவனை முறையாக நடத்தவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

அதாவது இந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க அவரை சந்திக்க வந்த திருமாவளவன் ஒரு உடைந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அந்த புகைப்படத்தில் அவர் அமைச்சருக்கு முன்பு பணிவாக கைகட்டிய நிலையில் அமர்ந்திருந்தது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

 

இதனையடுத்து சமூக நீதியை பற்றி பேசும் திமுக அமைச்சர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா? அரசியலுக்காக திருமாவளவன் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து போகலாமா?என சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.குறிப்பாக அதே அமைச்சர் மற்ற தலைவர்களை சந்திக்கும்போது எப்படி நடந்து கொண்டார்.திருமாவளவனுடன் நடந்த சந்திப்பின்போது எவ்வாறு நடந்து கொண்டார் என தொடர்புபடுத்தி விமர்சனம் செய்து வந்தனர்.மேலும் இதில் சிலர் திருமாவளவன் தற்போது அரசியல் எதிரியாக கருதும் பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தொடர்புபடுத்தி விமர்சித்து வந்தனர்.

Thirumavalavan with Ramadoss
Thirumavalavan with Ramadoss

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்த திருமாவளவன், ‘’அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் அங்கு இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு பணிந்து போக என்ன தேவையிருக்கிறது? நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே இல்லையே. என்னை பிடிக்காத நபர்கள், குதர்க்கவாதிகள், என்மீது காழ்ப்புணர்ச்சியை கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது ஏதாவது சேரு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனை நான் ஓருபோதும் பொருட்படுத்த மாட்டேன். எனது நலனில் அக்கறை உள்ளவர்கள் கேட்டால் இதற்காக நான் பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இவ்வாறு கைகட்டுவது என்னுடைய மேனரிசம். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அது அவர்களது இயலாமை, ஆற்றாமையை தான் காட்டுகிறது’’ என விளக்கமளித்துள்ளார்.

மக்களவை மற்றும் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பிரச்சாரங்களில் விசிக போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கவில்லை.அதனையடுத்து பல்வேறு சம்பவங்களில் திமுகவினரின் செயல்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவே இருந்தும் அம்மக்களுக்காக அரசியல் கட்சியை ஆரம்பித்த திருமாவளவன் அடங்கி செல்வது ஏன்? ஒரு காலத்தில் சாதியை ஒழிக்க அடங்க மறு! அத்து மீறு! மாற்று சமுதாய பெண்களை காதலித்து கல்யாணம் பண்ணு என அவருடைய தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய தலைவருக்கே இந்த நிலையா என ஒரு தரப்பு கிண்டலடித்து வருகிறது.