இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

0
85
These areas no longer have water supply! Announcement issued by the corporation!
These areas no longer have water supply! Announcement issued by the corporation!

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் ,பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பழைய மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் மெயின் பைப் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா மட்டும் லாரி மூலம் அந்தத்த பகுதிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் தலைமையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மூன்று நாட்களுக்கும் குடிநீர் தேவையை உணர்ந்து பொது மக்கள் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதுடன்.அதனை தேவைகேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் நகராட்சியின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.மேலும் குடிநீர் நிறுத்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K