கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

0
64

தமிழகத்தில் பொருத்தமாட்டில் கடந்த 2 மாதங்களில் அதிகமாக கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டு வருகிறது.இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும்,அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, ஏற்பட்ட மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்களும் வேறு காரணத்தால் நிகழ்ந்தவை என்று கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல் இருந்தனர்.ஆனால் தற்போது இந்த 444 இழப்புகளையும் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, விடுபட்ட 444 மரணங்களுக்கு கொரோனாவால் நிகழ்ந்தவையாக கருதி,அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று சுகாதார துறை ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த 444 மரணங்கள் விடுபட்டதை குறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.கொரோனா மரணங்களை மறைக்காதே என்று கூறினால் அய்யோ அரசியல் செய்கிறார்களே இந்த 420கள். கடந்த மார்ச் முதல் விடுபட்ட 444 கொரோனா மரணங்களை இன்று சொல்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை
அடக்கம் செய்தது யார்? இதனால் தொற்றேதும் வேறு யாருகாவது பரவியதா? நீங்கள் அடிக்கடி மாற்றும் எஜமானர்கள் போல மனித உயிரொன்றும் துச்சமில்லை அடிமைகளே’என்று தெரிவித்துள்ளார்.உதயநிதியின் இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
CineDesk