என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்!

0
63
There is no one to look after what! Selvaragavan's Lament Tweet!
There is no one to look after what! Selvaragavan's Lament Tweet!

என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்!

செல்வராகவன் தனது முதல் காதல் கொண்டேன் படத்தில் இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். படத்தின் கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். அதனை அடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது இரண்டாவது படம் செவன் ஜி ரெயின்போ காலனி இவருக்கு பெரும் வெற்றியைக் சூடிக் கொடுத்தது.

அதற்கு அடுத்தடுத்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன போன்ற படங்களை அவரது தம்பி தனுஷை வைத்து எடுத்து பெரும் வெற்றி இயக்குனராக திரையுலகில் வலம் வந்தார். இவர் 2019ஆம் ஆண்டு என் ஜி கே என்ற படத்தை சூர்யாவை வைத்து எடுத்தார். அதனை அடுத்து இவரது நடிப்பிலும் படம் வெளியானது. இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அவ்வாறு இன்று ஒரு புதிய ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியது,வாழ்க்கையில் மிகக் கொடுமை என்னைப் பாத்துக்க யாருமே இல்லை என்ற புலம்பல் தான்.உங்களை எதற்கு ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்? அவ்வாறு பார்த்துக் கொள்வது மருத்துவமனையில் நோயாளியாக இருப்பது போலத்தான், என்று கூறியுள்ளார்.உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.அது கடவுளே உங்களைப் பார்த்துக் கொள்வது போல். என்றவாறு கேள்வியையும் இவரே கேட்டு அதற்கு பதில் இவரை தந்துள்ளார்.

இவர் முதலில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கார்த்திக்கை வைத்து இயக்கினார். அப்படம் ,பாடல் ஆகியவை இணைந்து பெரும் வெற்றியை தந்தது. அவற்றின் இரண்டாம் பாகமான ஆயிரத்தில் ஒருவன் படம் தனுஷை வைத்து இயக்க உள்ளார். இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பெருமளவு காத்துக் கொண்டுள்ளனர்.