ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

0
69
தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை அந்நாட்டில் உள்ள உரூஸ்கான் மாகாணத்தில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையையினை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட வருடங்களாக தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை. தலீபான் பயங்கரவாதிகளால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வபோது கண்ணிவெடிகளை வெடிக்க செய்வதுண்டு. அப்படி கண்ணிவெடிகள் வெடிப்பதில் சில பேர் பலியாகி உள்ளனர்.
author avatar
Parthipan K