இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!  

0
71
Their Twitter accounts will be permanently disabled! Elon Musk Action!
Their Twitter accounts will be permanently disabled! Elon Musk Action!

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!

எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணகரார்களில் ஒருவர் .இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டர் அவரிடம் வந்தவுடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக கூறினார்.

மேலும் ட்விட்டர் கணக்குகளை பிரபலங்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் பயன்படுத்த அதிகாரப்பூர்வ பக்கங்களாக காட்ட ப்ளூ டிக் என்பதனை ரூ 400 கட்டணம் செலுத்தி பெற்று வந்தனர்.ஆனால் எலான் மஸ்க் ப்ளூ டிக் கணக்குகளை பெற செலுத்தும் கட்டணங்களை உயர்த்தியுள்ளார்.

ப்ளூ டிக் பெற பல வழிமுறைகள் இருந்தது.ஆனால் தற்போது அவை அனைத்தும் எளிதாக்கப்பட்டுள்ளது.அதனால் போலி கணக்கு வைத்திருப்பவர்கள் கூட தற்போது ப்ளூ டிக் கணக்குளை பெறுகின்றனர்.அதனால் போலி தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் தற்காலிகமாக ப்ளூ டிக் கணக்குகள் நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ப்ளூ டிக் முறை மீண்டும் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ப்ளூ டிக் சேவையை பணம் கொடுத்து யாரவது இதனை தவறாக பயன்படுத்தினால் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K