இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
143
Their appointment is invalid! Action order issued by the High Court!
Their appointment is invalid! Action order issued by the High Court!

இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரபட்டிருந்தது அந்த மனுவில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.ஆனால் அவர்களில் 152 பேர் உரிய தகுதி இல்லாமல் இருகின்றனர்.

மேலும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடத்துள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பணி நியமனம் செய்த 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆராய வேண்டும் எனவும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதனையடுத்து கல்லூரிக் கல்வி இயக்கம் சார்பில் அவர்களின் கல்வி தகுதி ஆய்வு செய்யப்பட்டது.அதனுடைய அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் ஆசிரியர் பணி அனுபவத்திற்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு நடத்துள்ளதாக தெரிவிக்கபட்டிருந்தது.

அதனையடுத்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முறையாக தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு உதவிப் பேராசிரியர் தேர்வு நடத்தப்பட்டபோது அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்றும் நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது ஆகையால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

author avatar
Parthipan K