வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

0
94
The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?
The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

கன்னியாகுமாரி மாவட்டம் களியங்காடு கீழ பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் பாண்டி(33). அவருடைய மனைவி மஞ்சுளா(23). பாண்டி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவருகிறது .அதற்காக விசா பெறுவது சம்பந்தமாக இவர் கடந்த 19 ம் தேதி திருச்சி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சி  சென்றுள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. பாண்டி குடும்பத்தினரையும்  தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா இரணியல் போலீசாரிடம் புகார்அளித்தார்.அந்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாண்டியை தேடி வருகின்றனர்.

 

author avatar
Parthipan K